ஜேர்மனி தவறு செய்துவிட்டது: ரஷ்ய ஜனாதிபதி புடின்...
ஜேர்மனி தவறு செய்துவிட்டது என்று கூறியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
நேட்டோ அமைப்புக்கு ஜேர்மனி ஆதரவளிப்பதால் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், ரஷ்யா தவறு செய்துவிட்டது என்று கூறியுள்ளார்.
உக்ரைன் போரில் நேட்டோ அமைப்புக்கு ஆதரவாக ஜேர்மனி செயல்படுவதால் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Nord Stream 2 எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவு ஜேர்மனியுடையது என்றும், ஜேர்மனியின் தேசிய பாதுகாப்பை விட நேட்டோ மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புக்கு ஜேர்மன் அரசு முன்னுரிமை கொடுத்தது தவறு என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் மக்கள், தொழில்கள் மற்றும் ஜேர்மனியின் பொருளாதாரம் ஆகியவை ஜேர்மன் அரசின் அந்த தவறின் பலனை அனுபவித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.