ஜேர்மன் நகரத்தில் இரு கும்பலுக்கு இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு! 15 பேர் கைது
மேற்கு ஜேர்மனியில் டுயிஸ்பர்க் நகரத்தில் இரண்டு கும்பலுக்கு இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுயிஸ்பர்க்கின் வடக்கு ஹாம்போர்ன் பகுதியில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை இரவு 9:00 மணிக்கு இந்த வெடித்த சம்பவத்தில், ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் சைக்கிள் கும்பல் மற்றும் அதிகாரிகள் பெயரிடாத துருக்கிய-அரபு குற்றக் கும்பலைச் சேர்ந்த 80 முதல் 100 பேர் வரை ஈடுபட்டுள்ளனர்.
அவசர அழைப்புகள் கிடைத்த நான்கு நிமிடங்களில் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்ததாக உள்துறை அமைச்சர் ரெயுல் தெரிவித்தார்.
சம்பவத்தைத் தூண்டியது என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் சம்பவ இடத்தில் 9 மிமீ கைத்துப்பாக்கிகளில் இருந்து சுடப்பட்ட குறைந்தது 19 ஷெல் உறைகளை மீட்டதாக காவல்துறை கூறுகிறது.
நான்கு பேர் காயமடைந்தனர், இருவர் படுகாயமடைந்தனர். பதினைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட படை அதிகாரிகள் வருவதற்குள் தேடப்படும் நபர்களும் அவர்களது குடும்பத்தினரும் வீடுகளை விட்டு வெளியேறி விட்டதாக கூறினாலும், இரவு முழுவதும் பொலிஸார் வீடுகளில் சோதனைகளை மேற்கொண்டனர்.
[SAERTT ]
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ரெயுல், இது ஒரு பெரிய பிரச்சனை, குறிப்பாக இங்கு ரூர் பள்ளத்தாக்கில் மக்களை பெரிதும் அச்சுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் கொண்ட கொலைவெறி பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவின் மாநிலத் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) எதிர்க்கட்சி உறுப்பினரான ஸ்வென் வுல்ப், "குடியிருப்பு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு: CDU (கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்) மற்றும் உள்துறை மந்திரி ரியுல் இதைத்தான் பாதுகாப்பானது என்று கூறுகிறார்களாக?" என்று விமர்சித்துள்ளார்.