ஜேர்மனியில் புதிய கோவிட்-19 ஆணை தாமதம்!
ஜேர்மனியில் அதிகாரத்துவ தடைகள் காரணமாக நாடு தழுவிய கட்டாய COVID-19 தடுப்பூசியை விதிக்கும் திட்டம் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், புதிய ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz), பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் ஜேர்மனியில் நாடு தழுவிய COVID-19 தடுப்பூசி ஆணை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார் .
இருப்பினும், இப்போது புதிய ஆணை 2022 மே அல்லது ஜூன் வரை நடைமுறைக்கு வராது என கூறப்படுகிறது.
ஸ்கோல்ஸின் அரசாங்கம் ஜேர்மனியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் உறுதி இல்லாமல் இருக்கிறார் என்பதால் அல்ல, அதிகாரத்துவ தடைகள் காரணமாகவே நாடு தழுவிய கட்டாய COVID-19 தடுப்பூசியை விதிக்கும் திட்டம் தாமதமாவதாக கூறப்படுகிறது.
ஜனவரி பிற்பகுதியில் இந்த பிரச்சினை பன்டேஸ்டாக்கில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிப்ரவரி மாதத்தின் பெரும்பகுதி விடுமுறைகள் திட்டமிடப்பட்டிருப்பதால், மார்ச் இறுதி வரை வாக்கெடுப்பு நடத்தப்படாது.
மசோதா பின்னர் மேல் சபைக்கு (Bundesrat) செல்லும், இது ஏப்ரல் வரை ஒப்புதல் அளிக்காது, அதாவது சிறப்பு பாராளுமன்ற அமர்வுகள் அழைக்கப்படாவிட்டால் மே மாத தொடக்கத்தில் இந்த மசோதா நடைமுறைக்கு வராது.
ஜனவரி 9, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஏறக்குறைய 75% ஜேர்மானியர்கள் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.
அரசாங்கத் தரவுகளின்படி, மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 72% பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் மற்றும் 42% க்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு பூஸ்டர் ஷாட்டைப் பெற்றுள்ளனர்.