ஜேர்மனிக்கு புலம்பெயர்வோரின் கல்வித்தகுதி: முன்னெப்போதும் இல்லாத அளவில் உச்சத்தில்
ஜேர்மனிக்கு புலம்பெயர்வோரின் கல்வித்தகுதி, முன்னெப்போதும் இல்லாத அளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
ஜேர்மனிக்கு புலம்பெயர்வோரின் கல்வித்தகுதி
The Rockwool Foundation Berlin (RFBerlin) என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்றில், 2024 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்களில் 32.1 சதவிகிதம் பேர் பல்கலைக்கழக பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதியைப் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது.
2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 30.9 சதவிகிதமாக இருந்தது.
திங்கட்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, இதை ஒரு சாதனை மட்டத்திலான எண்ணிக்கை என்றும், கடந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து கல்வித்தகுதி அதிகரித்து வரும் போக்கின் ஒரு பகுதி என்றும் விவரிக்கிறது.
கல்வி நிலைகளில் ஏற்பட்டுள்ள இந்த தொடர்ச்சியான உயர்வு, ஐரோப்பிய ஒன்றிய தொழிலாளர் சந்தைகளுக்கு, புலம்பெயர்ந்தோர் கொண்டு வரும் செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் Tommaso Frattini.
புலம்பெயர்ந்தோரின் திறன்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக இருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |