ஜேர்மனியில் மீண்டும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் நடத்தியுள்ள தாக்குதல்: அரசியலாகும் விவகாரம்

By Balamanuvelan Feb 14, 2025 10:20 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனியில் ஏற்கனவே புலம்பெயர்தலுக்கு எதிராக சில கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மீண்டும் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ள விவகாரம் அரசியலாகியுள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர் நடத்திய தாக்குதல்?

ஜேர்மனியின் பவேரியா மாகாண தலைநகரான மியூனிக் நகரில், வியாழக்கிழமையன்று, தொழிற்சங்க பேரணி ஒன்று நடந்துகொண்டிருந்த நிலையில், ஒருவர் வேண்டுமென்றே அந்தக் கூட்டத்தின் மீது வேகமாகக் காரைக் கொண்டு மோதியுள்ளார்.

இந்த பயங்கர சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 30 பேர் காயமடைந்தார்கள். அதில் ஒரு குழந்தை உட்பட இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை நடத்தியவர், 24 வயதுடைய ஆப்கன் நாட்டவரான புகலிடக்கோரிக்கையாளர் என்றும், அவர் நாடுகடத்தப்படுவதற்காக காத்திருந்தவர் என்றும் முதலில் தகவல்கள் வெளியாகின.

ஜேர்மனியில் மீண்டும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் நடத்தியுள்ள தாக்குதல்: அரசியலாகும் விவகாரம் | Germany Munich Car Attack Injures 30 Suspect

அரசியலாகும் விவகாரம்

அதைத் தொடர்ந்து, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி சார்பில் சேன்ஸலர் பதவிக்கு போட்டியிடுபவரான ஆலிஸ் வீடல் (Alice Weidel), தங்கள் கட்சி ஜேர்மனியில் ஆட்சியில் இருந்திருக்குமானால், தாக்குதல் நடத்திய ஆப்கன் நாட்டவர் ஜேர்மனிக்குள் நுழைந்திருக்கவேமாட்டார் என்று கூறியுள்ளார்.

எப்போதும் இப்படித்தான் நடக்கிறது என்று கூறியுள்ள ஆலிஸ், ஒரு புகலிடக்கோரிக்கையாளர் ஜேர்மனிக்குள் வருகிறார், அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது, ஆனால் அவர் நாடுகடத்தப்படமாட்டார், இதுவே வழக்கமாகிவிட்டது.

ஜேர்மனியில் மீண்டும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் நடத்தியுள்ள தாக்குதல்: அரசியலாகும் விவகாரம் | Germany Munich Car Attack Injures 30 Suspect  

இதுவே AfD கட்சி ஜேர்மனியில் ஆட்சியில் இருந்திருக்குமானால், அந்த ஆப்கன் நாட்டவர் ஜேர்மனியில் இருந்திருக்கவேமாட்டார் என்று கூறியுள்ளார் ஆலிஸ்.

விடயம் என்னவென்றால், உண்மையில் அந்த ஆப்கன் நாட்டவர் முறைப்படி ஜேர்மனியில் வாழ குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளார், பணி அனுமதியும் வைத்துள்ளார்.

இந்நிலையில், அந்த ஆப்கன் நாட்டவர் மீது ஏற்கனவே எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை, அத்துடன் நாடுகடத்தப்படுவதற்காக அவருக்கு நோட்டீஸ் அளிக்கப்படவும் இல்லை என பவேரியாவின் உள்துறை அமைச்சரான Joachim Herrmann தெரிவித்துள்ளார்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US