ஜேர்மனி பெரிய அளவில் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தவேண்டும்: தேர்தல் முடிவுகளால் மனம் மாறியுள்ள சேன்ஸலர்
ஜேர்மனியில் வாழத் தகுதியில்லாத புலம்பெயர்ந்தோரை பெரிய அளவில் ஜேர்மனி நாடுகடத்தவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
புலம்பெயர்ந்தோர் சிலரை எளிதில் நாடுகடத்த சட்டம்
ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் Nancy Faeser முன்வைத்துள்ள மசோதா ஒன்று, ஆபத்தானவர்கள் என கண்டறியப்பட்ட புலம்பெயர்ந்தோரை, அதாவது குற்றவாளிகள் மற்றும் ஆட்கடத்தல்காரர்களை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு, ஜேர்மன் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்க உள்ளது.
Hannibal Hanschke/REUTERS
திடீரென மனம் மாறியுள்ள ஜேர்மன் சேன்ஸலர்
இந்நிலையில், பதவியேற்கும் முன்பிருந்தே வெளிப்படையாக புலம்பெயர்தலை ஆதரித்துவந்த ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், திடீரென புலம்பெயர்தலுக்கு எதிராக, கடுமையான கருத்துக்களைத் தெரிவிக்கத் துவங்கியுள்ளார்.
அதற்குக் காரணம், ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், பழமைவாத மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. ஆளும் ஓலாஃப் கட்சியோ பின்னடைவைச் சந்தித்துள்ளது.
புலம்பெயர்தல் தொடர்பில் ஜேர்மன் மக்களுக்கு உருவாகியுள்ள கவலைகளே, புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட வலதுசாரியினருக்கு ஆதரவாக அவர்களை வாக்களிக்கத் தூண்டியதாக கருத்துக்கள் பரவிவருகின்றன.
ஆக, மக்களிடையே புலம்பெயர்தலுக்கு எதிரான மன நிலை உருவாகிவரும் நிலையில், தங்கள் கூட்டணிக் கட்சி புலம்பெயர்தலுக்கு ஆதரவு தெரிப்பதே தங்கள் கூட்டணிக் கட்சிகளின் பின்னடைவுக்குக் காரணம் என்பதை புரிந்துகொண்ட ஓலாஃப், புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகக் கூறத் துவங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |