ஜேர்மனிக்கு ஏராளம் புலம்பெயர்வோர் தேவை: ஆனால், தடையாக நிற்கும் சில விடயங்கள்...
ஜேர்மனிக்கு ஏராளமான திறன்மிகுப் பணியாளர்கள் தேவை. ஆகவே, வெளிநாட்டவர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்வதற்கு வசதியாக, அரசு பல தடைகளை நீக்கி புலம்பெயர்தலை எளிதாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால்...
ஆனால், வெளிநாட்டவர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்வதற்கு சில விடயங்கள் முட்டுக்கட்டையாக உள்ளன.
அவைகளில் ஒன்று இனவெறுப்பு, மற்றொன்று ஜேர்மனியின் கிழக்கு மாகாணங்களில் மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, வலதுசாரிக் கட்சிகளுக்கு அதிகரித்துவரும் ஆதரவு.
இந்தியர் ஒருவர் கூறும் செய்தி
இந்தியரான ஷிவம் மல்ஹோத்ரா (33), கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜேர்மனியின் Brandenburg மாகாணத்தில் குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார்.
Brandenburgஇல் வலதுசாரியினக்கு ஆதரவு அதிகரித்துவருவதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Shivam Mehrotra (Image: privat)
ஜேர்மனியில் இனவெறுப்பு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரித்துவருவதாக ஆய்வறிக்கைகள் கூறும் நிலையில், இந்த விடயங்கள் நீங்கள் ஜேர்மனிக்கு வர விரும்புகிறீர்களா இல்லையா என்பதை தீர்மானிக்கும் விடயங்கள் என தான் கருதவில்லை என்றாலும், அதே நேரத்தில், நாடு எந்த திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது கனவத்தில் கொள்ளவேண்டிய ஒரு விடயம்தான் என்கிறார் ஷிவம்.
தான் அதிர்ஷ்டவசமாக இதுவரை இனவெறுப்பு சம்பவங்களை எதிர்கொள்ளவில்லை என்று கூறும் ஷிவம், ஆனால், வலதுசாரிக் கொள்கைகள் நாட்டில் பிரபலமாகிவரும் விடயம் தன்னை தொந்தரவு செய்வதாகக் கூறுகிறார்.
மற்ற நாட்டவர்கள் கருத்து
ஆனால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறன்மிகுப் பணியாளர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், ஜேர்மனிக்கு வருவதற்கு தடையாக இருக்கும் விடயம் என நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, 38 சதவிகிதம் பேர், ஜேர்மன் மொழிப்புலமை இல்லாமைதான் தங்களுக்கு பெரும் தடை என்று கூறியுள்ளனர். 18 சதவிகிதத்தினர் மட்டுமே, இனவெறுப்பு மற்றும் பாரபட்சம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
இன்று உலக நாடுகள் பலவற்றில் காணப்படும் பாரபட்சம் மற்றும் இனவெறுப்பு ஆகிய விடயங்கள், இனவெறுப்பு இல்லாத ஒரு சமூகமே இருக்காது என்ற விடயத்தை மக்கள் மனதில் ஆழமாக பதித்துவிட்டது எனலாம்.
ஆகவேதான், இனவெறுப்பு இருக்கும் என தெரிந்தும் பலர் புலம்பெயர்வதற்கு அதை ஒரு தடையாக எண்ணாமல் இருக்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |