ஜேர்மனியில் குடியேற அதிகரிக்கும் வாய்ப்பு! 'கிரீன் கார்டு' போன்ற புதிய திட்டம் அறிமுகம்
ஜேர்மனி 'கிரீன் கார்டு' போன்ற அட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாத குடிமக்கள் வேலை தேடி வருவதை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.
ஜேர்மன் அரசாங்கம் அதன் தொழிலாளர் பற்றாக்குறையை சரிசெய்யும் முயற்சியில் Chancenkarte (வாய்ப்பு அட்டை) என்ற பெயரில் green card போன்ற ஒரு அட்டையை அறிமுகப்படுத்துகிறது.
ஜேர்மனியின் தொழில்துறை சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைச்சகம் சில காலமாக, தொழிலாளர் பற்றாக்குறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறைப்பதாக புகார் அளித்து வருகின்றன.
Photo: Picture-alliance
இந்த சூழலில், இந்த வாரம் ஜேர்மன் தொழிலாளர் மந்திரி Hubertus Heil புதிய "வாய்ப்பு அட்டை" (opportunity card) குறித்து ஊடகங்களில் தெரிவித்தார். மேலும், இந்த திட்டம் வெளிநாட்டினருக்கு job offer இல்லாமலே ஜேர்மனிக்கு வந்து வேலை தேடும் வாய்ப்பை வழங்கும் என்று கூறினார்.
அதற்கு நான்கு அளவுகோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன:
1) ஒரு பல்கலைக்கழக பட்டம் அல்லது தொழில்முறை தகுதி வேண்டும்
2) குறைந்தது மூன்று வருடங்கள் தொழில்முறை அனுபவம் வேண்டும்
3) மொழி திறன் அல்லது ஜேர்மனியில் ஏற்கெனவே குடியிருந்திருக்க வேண்டும்
4) 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
கனடாவின் புள்ளிகள் அமைப்பில் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் போலல்லாமல், இது மிகவும் சிக்கலான எடை அமைப்பைப் பயன்படுத்துகிறது. வரம்புகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கும் என்று மத்திய-இடது சமூக ஜனநாயகவாதிகளின் (SPD) மந்திரி Heil வலியுறுத்தியுள்ளார்.
Labor Minister Hubertus Heil - Photo: Britta Pedersen/picture-alliance
தொழிலாளர் சந்தையில் உள்ள தேவைக்கு ஏற்ப வாய்ப்பு அட்டைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஜேர்மன் அரசாங்கத்தால் வரையறுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.