ஒரு மில்லியன் கொரோனா சிகிச்சை மாத்திரைகளை ஆர்டர் செய்துள்ள ஜேர்மனி
ஜேர்மனி ஒரு மில்லியன் பாக்கெட்கள் கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைகளை ஆர்டர் செய்துள்ளதாக ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பைசர் நிறுவனத் தயாரிப்பான அந்த மாத்திரை Paxlovid என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது.
Paxlovid, மாத்திரை வடிவிலான முதல் கொரோனா சிகிச்சைக்கான மருந்தாகும்.
இந்த மாத்திரையை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம், ஏராளம் பேர் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதை தவிர்க்கமுடியும் என தான் கருதுவதாக ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbach தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் ஒரு பக்கம், சிகிச்சை ஒரு பக்கம் என மெதுவாக கொரோனா தன் பயங்கர சுபாவத்தை இழக்கப்போகிறது, இதனால் பள்ளிகளை மூடுவதையும் தவிர்க்கலாம் என்கிறார் Karl Lauterbach.
இந்த Paxlovid மத்திரையை, நாளொன்றிற்கு, ஒரு வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் மூன்று மாத்திரைகள், ஐந்து நாட்களுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும்போது, சுவை அறிதலில் குறைபாடு, பேதி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தசை வலி ஆகிய பக்க விளைவுகள் ஏற்படலாம்.
கடுமையான சிறுநீரக மறும் கல்லீரல் பிரச்சினைகள் உடையவர்கள் Paxlovid மாத்திரையை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், வேறு மாத்திரைகளுடன் Paxlovid மாத்திரையை சேர்த்து எடுத்துக்கொள்ளக்கூடாதென்றும், கர்ப்பிணிகள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.