பிரபல இஸ்லாமிய அமைப்பை தடை செய்த ஜேர்மனி! என்ன காரணம்? அரசாங்கம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
Düsseldorf நகரை தளமாக கொண்டு செயல்படும் இஸ்லாமிய அமைப்புக்கு தடை விதிப்பதாக ஜேர்மனி உள்துறை அமைச்சர் Horst Seehofer அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய அமைப்பான அன்சார் இன்டர்நேஷனல் மற்றும் அதன் பல துணை அமைப்புகளுக்கு ஜேர்மனி தடை விதிப்பதாக உள்துறை அமைச்சர் Horst Seehofer அறிவத்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான போராட வேண்டுமென்றால், அவர்களின் பண ஆதாரத்தை காலி செய்ய வேண்டும் என Horst Seehofer குறிப்பிட்டார்.
அன்சார் இன்டர்நேஷனல் அமைப்பு நன்கொடை மூலம் உலகளவில் பல தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீவ் ஆல்டர் கூறினார்.
Düsseldorf நகரை தளமாக கொண்டு செயல்படும் இஸ்லாமிய அமைப்பான அன்சார் இன்டர்நேஷனல், சிரியாவில் உள்ள அல்-நுஸ்ரா முன்னணி, பாலஸ்தீனிய ஹமாஸ் மற்றும் சோமாலியாவில் அல்-ஷபாப் உட்பட வெளிநாடுகளில் உள்ள பல தீவிரவாத அமைப்பிற்கு நிதி அனுப்புவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜேர்மனியில் புதன்கிழமை காலை ரைன்லேண்ட்-பாலாட்டினேட், பேடன்-வூர்ட்டம்பேர்க், பவேரியா, பெர்லின், பிராண்டன்பர்க், ஹாம்பர்க், நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா, லோயர் சாக்சனி, ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டீன் மற்றும் ஹெஸ்ஸி உட்பட 10 மாநிலங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், அன்சார் இன்டர்நேஷனலின் வலைத்தளம், அதன் மனிதாபிமான திட்டங்கள் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேவைப்படும் மக்களுக்கு உதவுகின்றன என்று கூறுகிறது.