ஆபத்திலிருக்கும் 2,000 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு ஜேர்மனிக்குள் அனுமதி: அதே நேரத்தில்...
தாலிபான்களால் பழிவாங்கப்படும் அபாயத்திலிருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள், கலைஞர்கள், அறிவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என சுமார் 2,000 பேருக்கு ஜேர்மனி தன் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதியளித்துள்ளது.
அதே நேரத்தில், காபூலிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டவர்களில் குற்றப்பின்னணி கொண்டவர்களும் இருப்பது தெரியவந்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் Horst Seehofer ஒப்புக்கொண்டுள்ளதையடுத்து, ஜேர்மன் பாதுகாப்புப் படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்போரின் அடையாளங்களைக் கண்டறியும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
ஜேர்மன் அமைச்சகத்தின் பட்டியலில், ஆபத்திலிருக்கும் 2,600 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆகத்து மாதம் 27ஆம் திகதியுடன் ஜேர்மனி தன் மீட்பு நடவடிக்கைகளை முடித்துக்கொண்டாலும், ஆப்கானிஸ்தானில் விடப்பட்டிருக்கும் ஜேர்மன் நாட்டவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக அவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பதாகவும் ஜேர்மனி தெரிவித்துள்ளது.