Fast-track குடியுரிமை திட்டத்தை ஒழிக்க தயாராகும் ஜேர்மனி
ஜேர்மனி அரசு, வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற உதவும் வழிமுறைகளில் ஒன்றான Fast-track திட்டத்தை ஒழிக்கத் தயாராகிறது.
முடிவுக்கு வரும் Fast-track குடியுரிமை திட்டம்
ஜேர்மனியுடன் ஒருங்கிணைந்து வாழும் வெளிநாட்டவர்கள் மூன்று ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்தாலே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் திட்டம் ஒன்று தற்போது நடைமுறையில் உள்ளது.
ஆனால், அந்த திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஒரு சட்டத்தை இயற்ற ஜேர்மன் அரசு திட்டமிட்டுவருகிறது.
முந்தைய சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் அரசு கொண்டுவந்த, விரைவாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை ஒழிப்பதற்காக, உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt) ஒரு மசோதாவை அறிமுகம் செய்துள்ளார்.
அந்த மசோதா ஜேர்மன் கேபினட்டில் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மன் சேன்ஸலராக பொறுப்பேற்றுள்ள பிரெட்ரிக் மெர்ஸ் அரசு, புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளைத் துவக்கியுள்ள நிலையில், அவரது அரசு ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான மனப்போக்கைக் கொண்டுள்ளதை இந்த நடவடிக்கை தெளிவாகக் காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |