அவசர கால எரிவாயுத் தேவைகளுக்காக ஜேர்மனியின் திட்டம்
அவசர கால எரிவாயுத் தேவைகளுக்காக ஜேர்மனி, எரிவாயு சேமிப்பகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுவருகிறது.
அவசர கால எரிவாயுத் தேவைகளுக்காக...
ஒருகாலத்தில் ஜேர்மனி ரஷ்ய எரிவாயுவை நம்பியிருந்தது. உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்ய எரிவாயு கிடைப்பதில் பிரச்சினை ஏற்படவே, தனது எரிவாயுத் தேவைகளை சந்திக்க மாற்று வழிகளை தேடத் துவங்கியது அந்நாடு.

அவ்வகையில், அவசர கால எரிவாயுத் தேவைகளுக்காக எரிவாயு சேமிப்பகம் ஒன்றை உருவாக்க ஜேர்மனி திட்டமிட்டுவருவதாக ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த சேமிப்பகம், 24 டெட்ராவாட் மணி அளவிலான எரிவாயுவை சேமிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
அந்த சேமிப்பகத்தைக் கட்டி, எரிவாயு வாங்கி அதை சேமிப்பதற்கு 1.2 முதல் 1.5 பில்லியன் யூரோக்கள் வரை செலவாகும் என அந்த திட்டத்துடன் தொடர்புடைய ஒருவர் ராய்ச்சர்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்ததாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |