ஜேர்மனியில் ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை: அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனை
ஜேர்மனியில், ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை நிலவும் நிலையில், மீண்டும் கட்டாய ராணுவ சேவையை அறிமுகம் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளார்கள்.
மீண்டும் கட்டாய ராணுவ சேவை
ஜேர்மனியில், 2011ஆம் ஆண்டு கட்டாய ராணுவ சேவை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், ராணுவத்தை பலப்படுத்த அரசு திட்டமிட்டுவருகிறது. தற்போது ஜேர்மன் ராணுவத்தில் 181,500 வீரர்கள் மட்டுமே உள்ள நிலையில், ராணுவத்துக்கு குறைந்தது 260,000 வீரர்களாவது தேவைப்படுகிறார்கள்.
ஜேர்மனியில் தற்போது ராணுவத்தில் சேருவதற்கு ஆர்வம் உடையோர் தாமாக முன்வந்து சேரலாம் என்ற நிலை உள்ளது.
ஆனால், இப்படி தானாக ராணுவத்தில் சேர முன்வருவோரை மட்டும் நம்பியிருந்தால், இலக்கை எட்ட முடியாது என சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் சாந்த கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, மீண்டும் கட்டாய ராணுவ சேவை முறையைக் கொண்டுவந்தால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |