ஜேர்மனியில் போலி தடுப்பூசி பாஸ்போர்ட் விற்பனை அமோகம்! சோதனையில் 12 பேர் கைது
போலியான கோவிட்-19 தடுப்பூசி பாஸ்போர்ட்களை தயாரித்து விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 12 நபர்களை ஜேர்மன் பொலிஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
போலிகள் ஒவ்வொன்றும் 400 யூரோக்கள் வரை விற்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
மத்திய ஜேர்மன் மாநிலம் முழுவதும் மொத்தம் 23 இடங்கள் மற்றும் பக்கத்து மாநிலமான Baden-Württemberg-ல் உள்ள இரண்டு நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக Hesse மாகாணத்தில் உள்ள குற்றவியல் புலனாய்வாளர்கள் ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்தனர்.
தடுப்பூசி பாஸ்போர்ட்கள் - QR குறியீடாகவோ அல்லது அதிகாரப்பூர்வ தடுப்பூசி காகித கையேடாகவோ தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரமாக காட்டப்படவேண்டும்.
பெரும்பாலான பார்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் தடுப்பூசி அல்லது நோய்த்தொற்றில் இருந்து மீண்டதற்கான ஆதாரம் தேவைப்படுகிறது. சில இடங்களில் சமீபத்திய எதிர்மறையான கோவிட் சோதனையின் ஆதாரதம் அனுமதிக்கப்படுகிறது.
தடுப்பூசி போட மறுக்கும் தடுப்பூசி மறுப்பவர்களின் எண்ணிக்கையில் அதிக விகிதங்களில் ஜேர்மனியும் ஒன்று.
Photo: AP
பொலிஸார் விசாரணை செய்ததபோது, தடுப்பூசி ஆவணங்களை பொய்யாக தயாரிக்கப்பதாக கூறப்படும் 36 வயது நபர் மற்றும் அவற்றை விற்றதாகக் கூறப்படும் 42 வயது நபர்கள் என இரண்டு பிரதான சந்தேக நபர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன.
தவறான QR குறியீடுகள் மற்றும் காகித ஆவணங்கள் இரண்டையும் கையாள்வதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் 10 பேரை பொலிஸார் தங்கள் சோதனையின் போது கைது செய்தனர். குறைந்தது 300 வாடிக்கையாளர்களுக்கு இந்த போலி சான்றிதழை விற்று இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் 100 யூரோ முதல் 400 யூரோ வரை விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
சோதனையின்போது, சந்தேக நபர்களின் மொபைல் போன்கள் மற்றும் தரவு சேமிப்பு சாதனங்களையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
மேலும், போலியான மற்றும் வெற்று தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான யூரோக்கள் ரொக்கமாக அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதேபோல், போலியான தடுப்பூசி பாஸ்போர்ட்களை வாங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களில் 20 பேரை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.