ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர்
ஜேர்மன் பொலிஸ் கூட்டமைப்பின் தலைவர், ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது என கூறியுள்ள விடயம் ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஜேர்மன் பொலிஸ் கூட்டமைப்பின் தலைவரால் சர்ச்சை
ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கூட்டமைப்பின் தலைவரான Dirk Peglow என்பவர், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமானால் அவர்கள் ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளார்.
அதாவது, ஜேர்மனியில் நிகழும் குற்றங்கள் தொடர்பிலான புள்ளிவிவரங்களை வெளியிடும்போது, அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் பெண்கள் பாதுகாப்பாக இருக்க உங்கள் அறிவுரை என்ன என கேட்டார்.

அதற்கு பதிலளித்த Peglow, பெண்கள் பாதுகாப்பாக இருக்க ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது நல்லது, ஆண்களுடன் உறவு இருக்கும்போது, மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் என்றார் அவர்.
நாளொன்றிற்கு இரண்டு பெண்கள் கொல்லப்படுகிறார்கள், அல்லது கொலை முயற்சிக்கு ஆளாகிறார்கள், அதேபோல பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கும் ஆளாகிறார்கள் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன என்று கூறியுள்ளார் Peglow.
அவரது கருத்து சர்ச்சையை உருவாக்கியதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர் என்னுடைய கருத்து மிகைப்படுத்தப்பட்டுள்ளது, நான் என்னுடைய அறிவுரையை அப்படியே எடுத்துக்கொள்ளும்படி கூறவில்லை, பெரும்பான்மை ஆண்கள் முரடர்களோ, குற்றவாளிகளோ அல்ல என்று விளக்கமளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |