போரிஸ்-மெர்க்கல் சந்திப்புக்கு முன்னதாக பிரித்தானியர்கள் தொடர்பில் ஜேர்மனி எடுக்கவுள்ள முக்கிய நடவடிக்கை! கசிந்த தகவல்
போரிஸ்-மெர்க்களல் சந்திப்புக்கு முன்னதாக பிரித்தானியா பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த ஜேர்மனி தாயராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவுக்கு வருகை தந்துள்ள ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், இன்று பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா இடையேயான பயணம் தொடர்பிலான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவில் டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக பிரித்தானியா பயணிகளை அனுமதிப்பதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பிரித்தானியார்கள் ஜேர்மனிக்குள் நுழைய கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜேர்மனி பிரித்தானியர்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த தயாராகி வருவதாக The Times தெரிவித்துள்ளது.
அதாவது, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் அல்லது கடந்த ஆறு மாதங்களில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் ஜேர்மனிக்குள் நுழையலாம்.
RKI வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி, தற்போது ஜேர்மனியில் பதிவாகியுள்ள புதிய கொரோனா தொற்றுகளில் 37 சதவிதம் டெல்டா மாறுபாடு என குறிப்பிட்டுள்ளது.