எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடு தேவை: புலம்பெயர்தல் தொடர்பில் ஜேர்மன் ஜனாதிபதி
ஜேர்மனி, புலம்பெயர்தலில் தன் வரம்பை எட்டிவிட்டது என்று கூறியுள்ள ஜேர்மன் ஜனாதிபதி, நாட்டில் எல்லைகளில் கடும் கட்டுப்பாடும், கண்காணிப்பும் தேவை என்று கூறியுள்ளார்.
இதற்கு மேல் கடினம்
2023ஆம் ஆண்டில் மட்டும் ஜேர்மனிக்கு 175,000 புகலிடக்கோரிக்கைகள் வந்துள்ளன. ஏற்கனவே, ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரைன் அகதிகளை ஜேர்மனி ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆக, இதற்கு மேல் புலம்பெயர்வோரை ஏற்றுக்கொள்வது கடினம் என்று கூறியுள்ளார் ஜேர்மன் ஜனாதிபதியான Frank-Walter Steinmeier.
ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் தேவை
ஆனால், ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் தேவை. உண்மையில், 2 மில்லியன் பணியிடங்களை நிரப்ப, ஜேர்மனி புலம்பெயர்வோரைத் தேடிக்கொண்டிருக்கிறது.
இது என்ன வேடிக்கை என்று நீங்கள் நினைக்கலாம். உலக நாடுகள் பலவற்றில் இந்த நிலைமைதான் காணப்படுகிறது. அதாவது, உண்மை என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மனிதனேய அடிப்படையில் ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளுக்கு ஏராளம் புகலிடக்கோரிகைகள் வருகின்றன.
அப்படி புகலிடக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் வரும் புலம்பெயர்வோர் எண்ணிக்கைதான் வரம்பை அடைந்துவிட்டது என்கிறார் ஜேர்மன் ஜனாதிபதி.
ஆனால், ஜேர்மனியில் வேலை செய்ய மக்கள் தேவைப்படுகிறார்கள். அதுவும், திறன்மிகுப்பணியாளர்கள் ஏராளமானோர் தேவைப்படுகிறார்கள். அவர்கள் இன்னமும் முறைப்படி விண்ணப்பித்து ஜேர்மனிக்கு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |