ஜேர்மனியில் பூஸ்டர் தடுப்பூசி குறித்து வெளியான மிக முக்கிய தகவல்!
ஜேர்மனியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பெற்ற குடிமக்களுக்கு அரசாங்கம் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியில் இந்த இலையுதிர்காலத்தில் 2 தடுப்பூசிகளையும் பெற்ற மக்களுக்கு முடிந்தவரை பூஸ்டர் தடுப்பூசி கிடைக்கும்படி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
மேலும், ஜான்சன் மற்றும் ஜான்சனைப் பெற்றவர்கள் 'போதிய தடுப்பூசி பாதுகாப்பு' காரணமாக இரண்டாவது தடுப்பூசியும் mRNA தடுப்பூசியாகவே பெற வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரித்தானியா, அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைப் போலவே ஜேர்மனியும் அதன் குடிமக்களுக்கு டாப் அப் அல்லது பூஸ்டர் என அழைக்கப்படும் மூன்றாவது தடுப்பூசியை வழங்குகிறது.
தற்போது பூஸ்டர் ஷாட் பெறுபவர்களில் பெரும்பாலானோர், பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்கள், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி பிரச்சனை உள்ளவர்கள் போன்ற ஆபத்தில் உள்ள மக்களாக உள்ளனர்.
ஆனால் ஜேர்மன் அரசாங்கத்தின் தடுப்பூசி ஆலோசனைக் குழுவின் கூற்றுப்படி, பூஸ்டர் கோவிட் ஊசி பெறுவதை கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு பெரிய குழுவாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.
ஜேர்மனியின் நிலையான தடுப்பூசி ஆணையத்தின் (STIKO) ஆரம்ப கண்டுபிடிப்புகளில், ஒருவர் எந்த MRNA தடுப்பூசியை செலுத்தினாலும் சரி, அவர்கள் இரண்டாவது தடுப்பூசிக்கும் அதே MRNA தடுப்பூசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.
பொதுவாக இரண்டு MRNA தடுப்பூசிகளை செலுத்திய எவரும் தங்கள் பூஸ்டர் தடுப்பூசியை அடுத்த 6 மாதங்கள் கழித்தே பெறவேண்டும் என கூற்றப்படுகிறது.
இந்நிலையில், STIKO வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு, 4 வாரங்களுக்கு முன்பே (5 மாதங்களில்) மூன்றாவது தடுப்பூசி அளவை பரிந்துரைக்கிறது. இதுகுறித்த மேற்பட்ட தகவலுக்கு தங்கள் பொது மருத்துவரை சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மூன்றாவது தடுப்பூசியும் கண்டிப்பாக MRNA தடுப்பூசியாகவே இருக்கவேண்டும் என்றும், குறிப்பாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பெற்றிருந்தால், அதே தடுப்பூசியை மட்டுமே தொடரும்படி STIKO பரிந்துரைக்கிறது.