எதிர்காலத்தில் கொரோனாவை எதித்து போராட ஜேர்மனி பலே திட்டம்! கசிந்த முக்கிய தகவல்
எதிர்காலத்தில் கொரோனா வைரஸை எதிர்த்து போராட, வருடாந்திர அடிப்படையில் தடுப்பூசி டோஸ்களை ஒதுக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டணத்தை செலுத்த ஜேர்மனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்காலத்தில் கொரோனாவை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஆண்டுக்கு 600-700 மில்லியன் டோஸ் இருப்பில் வைக்க ஜேர்மனி திட்டமிட்டுள்ளதாம்.
எதிர்வரும் ஐந்தாண்டு காலத்திற்கு தொற்றுநோய் ஆயத்த ஒப்பந்தகள் என அழைக்கப்படும் டெண்டர் கோர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என நாட்டின் சுகாதார அமைச்சர் Jens Spahn கூறினார்.
உற்பத்தியில் தேய்வு மற்றும் விநியோகத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய ஒப்புதலை நம்பியிருப்பது ஆகியவை ஜேர்மனியின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை குறைத்தது.
எனவே மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஜேர்மனி விரும்புகிறது.
ஜேர்மனி மட்டுமின்றி அவுஸ்திரேலியா, பிரேசில், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகள் மருந்து தயாரிப்பாளரான AstraZeneca PLC உடன் உற்பத்தி கூட்டு ஒப்பந்தம் அமைத்து வருகின்றன.
அதேசமயம், மறுபுறம் தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் உலக சுகாதார அமைப்பு, ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதை பணக்கார நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவது நினைவுக்கூரத்தக்கது.