வெளிநாட்டுப் பணியாளர்கள் ஜேர்மனி செல்வதை எளிதாக்கும் புதிய புலம்பெயர்தல் சட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள திறமையான பணியாளர்கள் ஜேர்மனிக்கு செல்வதை எளிதாக்கும் புதிய சட்டத்தின் முதல் கட்டம், நவம்பரில் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று கட்டங்களாக அறிமுகம்
ஜேர்மனியின் புலம்பெயர்தல் சட்ட சீர்திருத்தங்கள், அடுத்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் முதல், மூன்று கட்டங்களாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
ஜேர்மன் அரசு, இந்த ஆண்டு ஜூலை மாதம் புதிய புலம்பெயர்தல் சட்டத்திற்கான இறுதி ஒப்புதலை வழங்கியது.
இந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், அடுத்த ஆண்டு, அதாவது, 2024, மார்ச் மற்றும் 2024 ஜூன் என, மூன்று படிகளில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Germany Is Calling
இந்த புதிய சட்டம் திறமையான வெளிநாட்டு பணியாளர்களை ஈர்ப்பது மற்றும் நாட்டில் பணியாளர் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டின் புலம்பெயர்தல் சட்டத்தை நவீனமயமாக்கும் திட்டங்கள், மூன்றாம் நாட்டுக் குடிமக்கள் ஜேர்மனியில் வேலை செய்வதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதனால், ஜேர்மனியில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளிலிருந்து வந்து பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு 60,000 ஆக அதிகரிக்கக்கூடும்.
திறமையான புலம்பெயர்தல் சட்டத்தின் சீர்திருத்தங்கள், குறிப்பாக, தொழிற்கல்வி, கல்விசாரா பயிற்சி பெற்ற பணியாளர்கள் மீது கவனம் செலுத்துகின்றன. பல்கலைக்கழக பட்டம் பெற்ற தகுதி வாய்ந்த நிபுணர்களுக்கு தற்போதுள்ள விதிகளும் தளர்த்தப்படும்.
ஜேர்மனி தனது குடியேற்றக் கொள்கைகளில் ஏன் மாற்றங்கள் செய்கிறது?
பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே, ஜேர்மனியிலும் திறன் மிகுப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
2022 ஆம் ஆண்டில், நாட்டின் பணியாளர் பற்றாக்குறை 1.74 மில்லியனாக உயர்ந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், Munich நகரை மைமையமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான IFO ஆல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிறுவனங்களில், கிட்டத்தட்ட பாதி நிறுவனங்கள் பணியாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது. அதனால் அவர்கள் தங்கள் செயல்பாடுகளின் வேகத்தைக் குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
Euronews.com
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள தகுதி வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு இந்த இடைவெளியை நிரப்ப முடியும் என ஜேர்மனி நம்புகிறது. ஆனால் தற்போதிருக்கும் கட்டுப்பாடுகள் நாட்டின் புலம்பெயர்தல் செயல்முறையை மெதுவாக்குகின்றன.
ஆகவேதான், புதிதாக பொறுப்பேற்ற கூட்டணி அரசு, தன் புலம்பெயர்தல் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்து, இந்த பணியாளர் பற்றாக்குறை முதல், பொருளாதாரப் பிரச்சினைகள் வரை பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
CNBC
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |