ஜேர்மனியில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கா! வலுக்கும் எதிர்ப்புகள்
ஜேர்மனியில் கோவிட்-19 பாதிப்பு எண்னிக்கை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், தேசிய அளவிலான ஊரடங்கை அறிவிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பகுதிநேர உரடங்கை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு ஜேர்மனியின் தீவிர வலதுசாரி மாற்று (AfD) கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் கிழக்கு மாகாணமான சாக்சனியில் (Saxony) கடந்த ஒரு மாதத்தில் புதிய தினசரி நோய்த்தொற்றுகள் 14 மடங்கு உயர்ந்துள்து.
மேலும் சாக்சனி மிகக் குறைந்த தடுப்பூசி விகிதத்தையும், அதிக தொற்று வீதத்தையும் கொண்டுள்ளதால், தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் கடுமையான ஊரடங்கு விதிகளை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடாதவர்ககளுக்கு திரையரங்குகள், இசை நிகழ்ச்சிகள், கால்பந்து மைதானங்கள், பார்கள் மற்றும் டிஸ்கோக்களுக்குள் அனுமதி மறுக்கப்படும் நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஜேர்மனியின் அண்டை நாடான அஸ்திரியாவைப் போல் தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் கடுமையான ஊரடங்கு விதிப்பது ஒரு சார்புடைய செயல் என ஜேர்மன் தீவிர வலதுசாரி கட்சிகள் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளன.
தடுப்பூசி போடாதவர்களை மட்டும் குறிவைப்பது போதுமானது என்று தான் நம்பவில்லை என்று ஜேர்மன் தீவிர வலதுசாரி மாற்று கட்சியின் தலைவர் Michael Kretschmer தேசிய பாராளுமன்றத்தில் கூறினார்.
இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் முகக்கவசங்கள் அணிவதைத் தவிர, பொதுப் போக்குவரத்து மற்றும் பணியிடத்தில் தடுப்பூசி சாண்றிதழ் அல்லது மீட்பு அல்லது எதிர்மறையான COVID-19 சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட மக்களை கட்டாயப்படுத்தும்.