ஆப்கான் அகதிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜேர்மனி!
2,600 ஆப்கானியர்களுக்கு விசா வழங்குவதாக ஜேர்மன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்படக்கூடிய அல்லது ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் சுமார் 2,600 ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதியை வழங்குவதாக ஜேர்மன் அரசாங்கம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில், விசா பட்டியலில் சில முக்கிய தனிநபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒரு சிறப்பு பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்று அவர் கூறினார்.
மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் இந்த பட்டியலில் இடம்பெறவுள்ளனர்.
தாலிபான்கள் கையகப்படுத்துவதற்கு முன்பு ஜேர்மன் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்காக வேலை செய்த ஆப்கானியர்களும் இதில் சேர்க்கப்பட உள்ளனர்.
ஜேர்மன் அரசாங்கத்தின்படி, குடியிருப்பு அனுமதி 3 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படும், மேலும் பெறுநர்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கும் இந்த தாற்காலிக குடியுரிமை வழங்கப்படும்.
அனுமதி பெற்றவர்கள் ஜேர்மனியில் தஞ்சம் பெற விண்ணப்பிக்க தேவையில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குடியிருப்பு அனுமதி பெறுவதற்கு முன்பு பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.