16 வருடங்களுக்கு முன் செய்த குற்றம் குறித்து பெண்ணிடம் கூறிய குற்றவாளி: புகலிடக்கோரிக்கையாளர் வழக்கில் முக்கிய திருப்பம்
ஜேர்மனியில், தான் செய்த குற்றச்செயல் குறித்து 16 ஆண்டுகளுக்குப் பின் பெண் ஒருவரிடம் குற்றவாளி பெருமையடித்துக்கொள்ள, உண்மை அறிந்த அந்தப் பெண் பொலிசாருக்கு தகவலளித்ததால் வழக்கொன்றில் முக்கிய திருப்பம் ஒன்று நேரிட்டது.
தீவைத்து எரிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் மையம்
1991ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Saarlouis நகரில் அமைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது.
அதில், கானா நாட்டைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளரான Samuel Yeboah (27) என்பவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாமலே வழக்கு மறு ஆண்டே முடித்துவைக்கப்பட்டது.
Image: Landespolizeipräsidium Saarland
இந்த துயர சம்பவம் நிகழ்ந்து சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2007ஆம் ஆண்டு, பார்பிக்யூ பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற Peter S.என்பவர், தன்னுடன் பார்ட்டியில் பங்கேற்றிருந்த ஒரு பெண்ணிடம், அந்த தீவைப்பு சம்பவத்தைச் செய்தது நான்தான், என்னை இதுவரை பொலிசார் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அந்த தீவைப்பு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பதை 2019ஆம் ஆண்டு அறிந்துகொண்ட அந்தப் பெண், பொலிசாருக்கு அந்த நபரைக் குறித்து தகவலளித்துள்ளார்.
Image: Andrea Grunau/DW
சிக்கிய குற்றவாளி
அமைதியாக குற்றவாளியைத் தேடிவந்த பொலிசாரிடம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிக்கினார் Peter. 32 ஆண்டுகளுக்குப் பின், அந்த வழக்கு நீதிமன்றம் வந்துள்ளது.
வழக்கு குறித்து அறிந்தவர்கள் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் நடந்த நேரத்தில் அதிகாரிகள் அந்த வழக்கை அலட்சியமாக கையாண்டதும் தெரியவந்துள்ளது.
Image: Landespolizeipräsidium Saarland
எப்படியும், இத்தனை ஆண்டுகள் சென்றபிறகாவது வழக்கு நீதிமன்றம் வந்துள்ளதே என மகிழ்ச்சியடைந்துள்ளார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
Image: BeckerBredel/IMAGO
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |