கொரோனா காலகட்டத்தில் ஜேர்மனியில் நிகழ்ந்துள்ள ஒரு நல்ல விடயம்
கொரோனா பலரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் உள்ளது, பலிகொண்டும் உள்ளது. என்றாலும், கொரோனா காலகட்டத்தில் ஜேர்மனியில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாக நாட்டின் உயர் மட்ட பாதுகாப்பு அலுவலரான Horst Seehofer தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டில் ஜேர்மனியில் 5.3 மில்லியன் குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 2.3 சதவிகிதம் குறைவாகும். கடைகளை உடைத்து கொள்ளையடிப்பது, வழிப்பறி மற்றும் வாகன திருட்டுகள் பெருமளவில் குறைந்துள்ளன.
அரசு விதித்த கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.
இது ஒரு பாஸிட்டிவான முன்னேற்றம் என்கிறார் Horst Seehofer.
அதே நேரத்தில், இதே காலகட்டத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்படுதல், சைபர்
கிரைம், கொரோனாவை காட்டி பண மோசடி மற்றும் குடும்ப வன்முறைகள்
அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்ட அவர் தவறவில்லை.