ஐரோப்பியாவில் நம்பர் 1... புதிய சாதனை படைத்தது ஜேர்மனி! வியக்கும் உலக நாடுகள்
கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதில் ஐரோப்பிய அளவில் ஜேர்மனி புதிய சாதனையை படைத்துள்ளது.
ஜேர்மனி கடந்த 24 மணி நேரத்தில் 1.35 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட்டு புதிய சாதனை படைத்துள்ளது என்று Justin Huggler குறிப்பிட்டுள்ளது.
புதிய சாதனை புதன்கிழமை படைக்கப்பட்டது, ஆனால் நேற்று தேசிய விடுமுறை என்பதால் புள்ளிவிவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஜேர்மனி தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் மே 5ம் திகதி அன்று ஐரோப்பியாவிலேயே ஒரே நாளில் 1.13 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு ஜேர்மனி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டருக்குப் பிறகு ஜேர்மனியின் தடுப்பூசி விநியோகம் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது.
ஜேர்மனியில் ஒரே நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடுவது இது நான்காவது முறையாகும்.