புதிய சாதனை படைத்தது ஜேர்மனி! பிரித்தானியாவை பின்னுக்கு தள்ளி ஐரோப்பியாவிலே நம்பர் 1 இடத்தை பிடித்தது
ஐரோப்பியாவிலேயே ஒரே நாளில் அதிக கொரோனா தடுப்பூசி போட்ட நாடு என்ற சாதனையை படைத்துள்ளது ஜேர்மனி.
ஒரு நாளில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, ஜேர்மன் மருத்துவர்கள் புதன்கிழமை 10,88,952 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளனர்.
இது மார்ச் 20 அன்று பிரித்தானியா படைத்த சாதனையை முறியடித்துள்ளது, மார்ச் 20 அன்று பிரித்தானியா ஒரே நாளில் 8,74,000 பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்தது.
ஜேர்மனி தனது மக்கள்தொகையில் 1 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு ஒரு நாளில் தடுப்பூசி போட்டது இதுவே முதல் முறையாகும்.
மிகப் பெரிய மக்கள்தொகை அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே 24 மணி நேரத்தில் அதிக கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை மக்களுக்கு போட்டுள்ளன.
ஜேர்மனி தற்போது அதன் மக்கள்தொகையில் 25.9 சதவிகிதம் அல்லது 21.5 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.