பணம் வாங்கிக்கொண்டு ரஷ்யாவுக்காக உளவு பார்த்த ஜேர்மானியர்: நீதிமன்ற விசாரணை துவக்கம்
ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஜேர்மானியர் ஒருவர் மீது இன்று நீதிமன்ற விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
யார் அந்த நபர்?
Carsten L. என்னும் அந்த ஜேர்மானியர், ஜேர்மன் வெளியுறவு உளவுத்துறை அமைப்பில் பணிபுரிந்தவர் ஆவா.ர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக அவர் கைது செய்யப்பட்டார்.
Image: Jörg Carstensen/picture alliance
ஜேர்மன் அரசு தொடர்பான முக்கிய தகவல்களை, தானே பிரிண்ட் அவுட் எடுத்த Carsten, அவற்றை ரஷ்யாவுக்குக் கொண்டு செல்ல Arthur E. என்பவரின் உதவியை நாடியுள்ளார். Arthur அந்த ஆவணங்களை ரஷ்யாவுக்குக் கொண்டு சென்று ரஷ்ய உளவுத்துறையிடம் கையளித்துள்ளார்.
அமெரிக்க பொலிசாரின் உதவியுடன் இந்த இருவரையும் ஜேர்மனி கைது செய்தது.
தேச பாதுகாப்புக்கு ஆபத்து
Carstenம் Arthurம் தேச பாதுகாப்பின் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இன்று Carsten மீதான வழக்கு விசாரணை ஜேர்மனியில் துவங்கியுள்ளது.
ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததற்காக, Carstenக்கும் Arthurக்கும் முறையே 450,000 மற்றும் 400,000 யூரோக்கள் ரஷ்ய அதிகாரிகளால் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |