ஐரோப்பாவிலேயே புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவதில் முதலிடம் பிடித்துள்ள நாடு
ஐரோப்பாவிலேயே புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவதில் ஜேர்மனிதான் இப்போதும் முதலிடத்தில் உள்ளது.
அதிகம் பேர் புகலிடம் தேடும் ஒரு நாடாக ஜேர்மனி நீடிக்கும் நிலையில், 2021இல் ஜேர்மனியில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 100,000ஐ தாண்டியாயிற்று.
ஜேர்மனியின் புலம்பெயர்தல் மற்றும் அகதிகளுக்கான பெடரல் அலுவலகம், செப்டம்பர் இறுதிவாக்கில் 100,278 ஆரம்ப கட்ட புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 35.2 சதவிகிதம் அதிகமாகும்.
முதன்முறையாக ஜேர்மனியில் புகலிடம் கோரியுள்ளோரில் பெரும்பாலானோர் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதற்கிடையில், ஜேர்மனியில் புதிதாக அமைய உள்ள ஆட்சியும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் அகதிகள் கொள்கைகளை மறுசீரமைப்பு செய்ய உள்ளதாக கூறியுள்ளதால், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சாதகமான சூழலே காணப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.