ஜேர்மனியில் Telegram செயலிக்கு தடை!
ஜேர்மனியில் கொலை மிரட்டல்கள் விடுக்க பயன்படுத்தப்படுவதன் காரணமாக Telegram செயலிக்கு தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு எழுந்துள்ளது.
இலவசமாக செய்திகள் மற்றும் தரவுகளை மரிமாற்றம் செய்துகொள்ளும் சேவையை வழங்கும் Telegram செயலி, ஜேர்மனியின் தேசிய சட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தை மீறுகிறது என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்தால், அதன் சேவைக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
டெலிகிராமுக்கு எதிரான சாத்தியமான நடவடிக்கைகள் பற்றிய பேச்சுக்கள் நடந்து வருவதாக ஜேர்மனியின் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை கூறினார்.
மேலும், டெலிகிராமை தடைசெய்ய என்ன சட்ட மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகள் அவசியம் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
வலதுசாரி தீவிரவாதிகள் அரசாங்கத்தின் தொற்றுநோய்க் கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்க Telegram பயன்படுத்தியுள்ளனர், அவற்றில் சில ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன எனபதால் இந்த செயலி அதிக விமர்சனத்திற்கு உட்பட்டுள்ளது.
Mecklenburg-Western Pomerania-வின் மாநிலப் பிரீமியரான Manuela Schwesig-க்கு எதிராக Telegram மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கொலை மிரட்டல்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், டெலிகிராமை தடைசெய்வது குறித்து தீவிரம் கட்டப்படுவதாகவும், இது குறித்து தெளிவான கடைசி முடிவு விரைவில் எடுக்கப்படும் எனவும் ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர், வார இதழான Die Zeit க்கு அளித்த பேட்டியில் கூறினார்.