அமெரிக்காவை மிக ஆபத்தான பகுதியாக அறிவித்தது ஜேர்மனி! புதிய கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு: வெளியான முக்கிய அறிவிப்பு
ஜேர்மனி அதன் மிக ஆபத்தான பகுதி பட்டியலில் அமெரிக்காவை சேர்த்துள்ளது.
அமெரிக்காவில் டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக தொற்றுகள் அதிகரித்து வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15) முதல் சமீபத்தில் அமெரிக்காவில் தங்கியிருந்த பயணிகள் ஜேர்மனிக்குள் நுழைய இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது முக்கியமான காரணத்திற்காக மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
தடுப்பூசி போடாதவர்கள் அல்லது தொற்றலிருந்து மீண்டதற்கான ஆதராத்தை வழங்க முடியாதவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
தொற்று பாதிப்பு இல்லை என ஆதாரம் வைத்திருப்பவர்கள் 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவிலிருந்து வரும் தடுப்பூசி போடாத பயணிகள் தொற்று இல்லை என்ற ஆதாரத்தை வழங்கினாலே ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.
தற்போது டெல்டா மாறுபாட்டால் கொரோனாவின் 4வது அலையுடன் அமெரிக்கா போராடி வருவதால் ஜேர்மனி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்கா மக்கள் தொகையில் கிட்டதட்ட 52% பேர் தடுப்பூசி போட்டுள்ள நிலையில், கடந்த வாரம் மட்டும் புதிதாக சுமார் 9 லட்சம் பேருக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் இஸ்ரேல், துருக்கி, வியட்நாம் மற்றும் பிற நாடுகளும் ஜேர்மனியின் மிக ஆபத்து பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பிரித்தானியா, ஸ்பெயின், இந்தியா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகள் ஏற்கனவே இந்த பட்டியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.