சொந்த ராணுவ பயன்பாட்டிற்கு முன்பே புதிய ஏவுகணைகளை உக்ரைனுக்கு அள்ளிக்கொடுக்கும் ஜேர்மனி
ஜேர்மனி அதன் சொந்த ராணுவம் பயன்படுத்துவதற்கு முன்பே புதிய ஏவுகணை அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கவுள்ளது.
ஜேர்மனி, உக்ரைனுக்கு பாதுகாப்பு ஆதரவாக 100 IRIS-T வழிகாட்டி ஏவுகணைகளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
NATO-வின் Ukraine Defense Contact Group (UDCG) கூட்டத்திற்குப் பிறகு, ஜேர்மன் தூதரகம் அதன் X சமூக வலைதளத்தில் இதை உறுதிப்படுத்தியது.
50-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற UDCG கூட்டத்தில் உக்ரைனுக்கு தொடர்ந்து இராணுவ மற்றும் பயிற்சி உதவி வழங்கும் உறுதிமொழி அறிவிக்கப்பட்டது.

ஜேர்மனி இதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் 100 IRIS-T ஏவுகணைகளை விரைவில் அனுப்ப உறுதியளித்துள்ளது.
இதற்கு முன், ஜேர்மனி உக்ரைனுக்கு 6 IRIS-T SLM மற்றும் 5 IRIS-T SLS பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியுள்ளது.
IRIS-T அமைப்புகள், ஜேர்மனியின் Bundeswehr (ஜேர்மன் ராணுவம்) உத்தியோகப்பூர்வமாக பயன்படுத்துவதற்கு முன்பே உக்ரைனுக்கு வழங்கப்பட்டன.
ஜேர்மனி கடந்த ஜனவரி 14 அன்று புதிய இராணுவ உதவித்தொகுப்பை அறிவித்ததன் தொடர்ச்சியாக, இந்த ஏவுகணைகள் வழங்கப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
German iris-t Missile, Germany Ukraine