ஜேர்மனியில் அமுலுக்கு வரும் புதிய விதி! கசிந்த முக்கிய தகவல்
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்க ஜேர்மனி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியின் உள்ளூர் ஊடகம் ஒன்றின் வெளியிட்ட செய்தியில், அடுத்த வார இறுதியிலிருந்து இரண்டு டோஸ் போட்ட அனைவருக்கும் அனைத்து கட்டுப்பாடுகளிலிருந்தும் விலக்கு அளிக்க அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தாலும் இனி தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை.
மேலும், ஜேர்மனியில் பல பகுதிகளில் அமுலில் உள்ள இரவு நேர ஊரடங்கிலிருந்து தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
குறிப்பிட்ட பேரை தான் சந்திக்க வேண்டும் என்ற வரம்பு இனி தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இல்லை, அதவாது தடுப்பூசி போடப்பட்டவர்கள் இனி உட்புறங்களிலும் வெளிப்புறங்களிலும் எத்தனை பேரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்ல அல்லது சலூன்களுக்கு செல்ல கட்டாயம் கொரோனா இல்லை என்ற பரிசோதனை முடிவு தேவை என தற்போது அமுலில் உள்ள விதிகளிலிருந்து தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
புதிய விதிமுறைகள் எல்லை தாண்டிய பயணங்களுக்கு பொருந்துமா அல்லது அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வந்த பிறகு கட்டாய சுய-தனிமைப்படுத்தலில் இருந்து தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.