அமைச்சரவை ஒப்புதல்... கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தி! ஜேர்மனி முக்கிய அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு ஜேர்மனி செப்டம்பர் இறுதி வரை பொருளாதார உதவிகளை வழங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா நெருக்கடி காரணமாக தங்கள் வருவாய் சரிந்துவிட்டதாக நிரூபிக்க முடிந்தால், நிறுவனங்கள் அரசாங்கம் வழங்கும் பொருளாதார உதவிகளை பெற உரிமை கோரலாம்.
இந்த திட்டம் ஜூன் மாத இறுதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாத இறுதி வரை பொருளாதார உதவிகளை வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா நெருக்கடி முடிந்தவுடன் சரிவிலிருந்து மீண்டெழுவதற்கு நிறுவனங்களுக்கு இது உதவும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் அனைத்து நிறுவனங்களும் நெருக்கடிக்குப் பிறகு விரைவாக மீண்டெழ முடியும் என்று பொருளாதார அமைச்சர் Peter Altmaier தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை, தொழிலாளர்கள் மத்தியில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள விளைவை ஈடுகட்ட செப்டம்பர் இறுதி வரை சிறப்பு குறுகிய கால வேலை ஊதியம் வழங்குவதை நீட்டிக்க அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் அமைச்சரவையும் ஒப்புக்கொண்டது.