சவுதி மீதான தடையை நீட்டிக்க ஜேர்மன் புதிய அரசாங்கம் முடிவு! கசிந்த தகவல்
சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதற்கான தடையை ஜேர்மன் புதிய அரசாங்கம் அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கும் என்று பொருளாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
முந்தைய ஜேர்மன் அரசாங்கம் விதித்த தடை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏமன் போரில் அவர்களின் ஈடுபாடு நிரூபிக்கப்படும் வரை, குறிப்பிட்ட நாடுகளுக்கு பாதுகாப்புத் துறை ஏற்றுமதிக்கான அனுமதிகளை நாங்கள் வழங்க மாட்டோம் என்று கிரீன் கட்சி தலைமையிலான அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
துருக்கியில் உள்ள தூதரகத்தில் சவுதியுடன் கருத்து வேறுபாடு கொண்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதை அடுத்து, ஏஞ்சலா மெர்க்கலின் கன்சர்வேட்டிவ் அரசாங்கம் 2018ல் சவுதிக்கு ஆயுத ஏற்றுமதியை தடை செய்தது.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.
சவுதியின் மனித உரிமை மீறல்களை மேற்கோள்காட்டி எதிர்க்கட்சியாக இருந்தபோது கிரீன் கட்சியினர் தடை விதிக்க அழுத்தம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.