விலைவாசி உயர்வால் திணறிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்த ஜேர்மனி: குறிப்பாக குழந்தைகளுக்கு...
ஜேர்மனி அரசு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பில் தற்போது ஒரு நல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வால் திணறிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மற்றுமொரு திடீர் உதவியை அறிவித்துள்ளது ஜேர்மனியின் கூட்டணி அரசு.
அதாவது, கடந்த ஞாயிறன்று மக்களுக்குப் பல்வேறு உதவித்திட்டங்களை அறிவித்திருந்தது ஜேர்மனி அரசு. அதில், பிள்ளைகளுக்கான உதவித்தொகையை 18 யூரோக்கள் உயர்த்த இருப்பதாக வெளியான அறிவிப்பும் ஒன்று. ஆனால், இந்த புதிய உதவி அறிவிப்பு, அதாவது கூடுதல் தொகை, குடும்பத்திலுள்ள முதல் இரண்டு பிள்ளைகளுக்குத்தான்.
DPA
இந்த விடயத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தார்கள். அரசு இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களை கண்டுகொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
ஆகவே, 2023, ஜனவரி 1ஆம் திகதி முதல், ஒரு குடும்பத்திலுள்ள முதல் மூன்று குழந்தைகள் இந்த நிதி உதவி உயர்வைப் பெறுவார்கள். அதாவது, அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்பட்டு ஆளுக்கு 237 யூரோக்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
மூன்றுக்கு மேல் பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தொகை மட்டுமே வழங்கப்படும், அவர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.