அகதிகள் ஆதரவு திட்டம் ஒன்றை ரத்து செய்த ஜேர்மனி
ஜேர்மனி அரசு, அகதிகள் ஆதரவு திட்டம் ஒன்றை ரத்து செய்துள்ளது.
அகதிகள் ஆதரவு திட்டம் ஒன்று ரத்து
ஜேர்மனியில், அகதிகள் நிலை பெற தகுதியற்ற, அதே நேரத்தில், தங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றால் ஆபத்து என்பதால் ஜேர்மனியில் வாழ அனுமதியளிக்கப்பட்டுள்ள, subsidiary protection status என்னும் நிலையிலிருக்கும் புலம்பெயர்ந்தோர் 351,400 பேர் இருக்கிறார்கள்.
அந்த புலம்பெயர்ந்தோரின் குடும்பத்தினர், ஜேர்மனிக்கு வந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துகொள்வதற்கு தடை விதிக்கும் மசோதா ஒன்று ஜேர்மன் நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்பட்டது.
அந்த மசோதாவை ஜேர்மன் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதாவது, subsidiary protection status என்னும் நிலையிலிருக்கும் புலம்பெயர்ந்தோரின் குடும்பத்தினர், ஜேர்மனிக்கு வந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துகொள்ளும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |