ஜேர்மனியில் ஜனவரி 4-ஆம் திகதி வரும் மாற்றம்!
ஜேர்மனியில் ஜனவரி 4 முதல், வைரஸ் மாறுபாடு பகுதிகளின் பட்டியலில் உள்ள அனைத்து நாடுகளும் 'அதிக ஆபத்துள்ள பகுதிகள்' பட்டியலுக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் தற்போதைய வைரஸ் மாறுபாடு பகுதிகளின் (Virus Variant Areas) பட்டியல் ஜனவரி 3, 2022 திங்கள் இரவு 11.59 வரை செல்லுபடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு, ஜனவரி 4, 2022 செவ்வாய் அதிகாலை 12:00 மணி முதல், முன்னர் Virus Variant Areas என வகைப்படுத்தப்பட்ட நாடுகள், High-Risk Areas, என வகைப்படுத்தப்படும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கு பொறுப்பான ஆராய்ச்சி நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) வியாழக்கிழமை அறிவித்தது.
ஜேர்மன் மத்திய அரசு நிறுவனமான RKI, அடுத்த செவ்வாய் முதல், பின்வரும் நாடுகளை, அதிக ஆபத்துள்ள பகுதிகளாக பட்டியலிடுகிறது:
- போட்ஸ்வானா
- எஸ்வதினி
- லெசோதோ
- மலாவி
- மொசாம்பிக்
- நமீபியா
- ஜிம்பாப்வே
- தென்னாப்பிரிக்கா
- பிரித்தானியா
இந்த மாற்றம் ஜனவரி 4 முதல், இந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஜேர்மனியின் எல்லைக்குள் நுழைய தகுதியுடையவர்களாக இருப்பார்கள், அதே நேரத்தில் பெரும்பாலான உலக பயணிகளின் அதே கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருப்பார்கள்.
முன்னர் ஜேர்மன் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மற்றும் சில குறிப்பிட்ட பிரிவுகள் மட்டுமே வைரஸ் மாறுபாடு பகுதிகளில் இருந்து ஜேர்மனிக்குள் நுழைய முடியும் என்ற நிலை இருந்தது.
ஆயினும்கூட, இந்த 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஜேர்மனிக்கு வருவதற்கு முன்பு einreiseanmeldung.de இல் பதிவுசெய்து, நுழைந்தவுடன் பதிவுசெய்ததற்கான உறுதிப்படுத்தலை அவர்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
நாட்டுக்குள் நுழைந்தவுடன், 6 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சோதனைச் சான்று, மீட்புச் சான்று அல்லது தடுப்பூசி போட்டதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
ஒரு பொது விதியாக, கோவிட் சோதனைகள் (ஆன்டிஜென் சோதனைகள் அல்லது PCR சோதனைகள்) ஜெர்மனிக்குள் (திட்டமிடப்பட்ட) நுழையும் நேரத்தில் 48 மணிநேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது, என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து வரும் பயணிகள், மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஆதாரங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கத் தவறினால், அவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
தடுப்பூசி அல்லது COVID-19 இலிருந்து மீண்டு வந்ததற்கான ஆதாரத்தைக் காண்பிப்பவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறலாம், அதேசமயம் கொரோனாவுக்கு எதிர்மறையான சோதனை செய்தவர்கள் 5-வது நாளுக்கு முன்னதாக நடத்தப்படம் மற்றொரு சோதனையின் மூலம் தனிமைப்படுத்தலை முடித்துக்கொள்ளலாம்.