இது என்னவென்று தெரிகிறதா? ஜேர்மனியில் தடுப்பூசியை ஊக்குவிக்க புது முயற்சி!
ஜேர்மனியில் கோவிட்-19 தடுப்பூசி போடுவதை ஊக்குவிப்பதற்கான புதிய முயற்சியாக நூற்றுக்கணக்கான ஆடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகர்த்திற்கு தெற்கே உள்ள ஷ்னெவர்டிங்கனில் (Schneverdingen) உள்ள ஒரு வயலில் சுமார் 100 மீட்டர் (330-அடி) நிலத்திற்கு ஊசி வடிவில் ஆடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
திங்கட்கிழமை செய்யப்பட்ட இந்த புது முயற்சியில், சுமார் 700 செம்மறி ஆடுகள் கொண்டுவரப்பட்டு, அவற்றை ஊசி வடிவில் நிற்க வைக்க கிலோ கணக்கில் ருசியான பாண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், இதற்காக இத்தனை ஆடுகளுடன் Wiebke Schmidt-Kochan எனும் அதன் மேய்ப்பர் பல நாட்கள் பயிற்சி செய்துள்ளார்.
இறுதியில், இதை எளிதான ஒன்றாக மாற்றிக்காட்டிய அப்பெண், சிரிஞ்ச் வடிவத்தில் பாண் துண்டுகளை அடுக்கி வைத்து, செம்மறி ஆடுகளை வயலுக்கு வெளியே மேயவிட்டு, நினைத்த வடிவத்தில் நிற்க வைத்தார்.
Photo: AP ஆடுகளால் ஆன இந்த ஊசி 328 அடி நிலத்திற்கு உருவானது.
ஜேர்மனியில் இன்னும் தடுப்பூசி போடத் தயங்கும் நபர்களை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இந்த முயற்சியின் அமைப்பாளர் Hanspeter Etzold தெரிவித்தார்.
"செம்மறியாடுகள் மிகவும் விரும்பத்தக்க விலங்குகள் - ஒருவேளை அவை இந்த செய்தியை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்" என்று அவர் கூறினார்.
COVID-19 நோய்த்தொற்றுகளின் சமீபத்திய அலைகளை முறியடிக்கும் முயற்சியில் ஜேர்மன் அரசாங்கம் துரிதப்படுத்தப்பட்ட தடுப்பூசி பிரச்சாரத்தை அதன் முதன்மையான முன்னுரிமையாக செய்துவருகிறது.
குறைந்தபட்சம் இரண்டு தடுப்பூசி டோஸ்களை பெற்ற மக்கள் தொகையின் சதவீதம் 71.2 சதவீதமாக உள்ளது.
அதேபோல், பூஸ்டர் ஷாட் பெற்றவர்கள் சமீபத்திய வாரங்களில் மிக வேகமாக அதிகரித்து, இப்போது மக்கள் தொகையில் 38.9 சதவீதத்தினராக உள்ளனர்.