ஜேர்மனி சட்டத்தை மீறிவிட்டது... ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம், காற்றின் தரத்தை கவனிக்கத் தவறிய விடயத்தில் ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை மீறிவிட்டதாக தீர்ப்பளித்துள்ளது.
முக்கிய நகரங்களான பெர்லின், முனிச், ஹாம்பர்க் உட்பட 26 பகுதிகளின் மோசமான காற்றின் தரத்தை கட்டுப்படுத்த ஜேர்மனி தவறிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஜேர்மனி 2010 முதலே வருடாந்திர நைட்ரஜன் டையாக்சைடு வெளியீட்டு அளவை தொடர்ந்து மிஞ்சியுள்ளது என்று கூறி ஐரோப்பிய ஆணையம் 2018ஆம் ஆண்டு புகார் ஒன்றை பதிவு செய்திருந்த விடயத்தில்தான் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது
. இந்த விடயத்தில், ஜேர்மன் அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாடுகளுக்கு இணங்கவில்லை என ஐரோப்பிய ஆணையம் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனி தீர்ப்புக்கு கட்டுப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,
அதற்கு அபராதங்கள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.