அதிகரிக்கிறது ஐ.எஸ் ஆட்டம்! ஜேர்மன் பகிரங்க எச்சரிக்கை
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக ஜேர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் Heiko Maas எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிராக இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறும் உலகளாவிய மாநாட்டிற்கு முன்னதாக Heiko Maas இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.எஸ் இயக்கம் தோன்றிய ஈராக் மற்றும் சிரியாவுக்கு அப்பால் செல்வாக்குப் பெற்று வருகிறது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்-க்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது, அந்த இயக்கம் வீழ்த்தப்படவில்லை.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஆபிரிக்காவில் ஐ.எஸ் இயக்கம் தனது தீவிரவாத செயல்பாடுகளை அதிகரித்து வருகிறது என Heiko Maas எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க திங்களன்று ரோம் நகரில் அமெரிக்கா தலைமையில் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் 83 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆபிரிக்காவில் தீவிரவாதிகளை ஒரு அங்குலம் கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை ரோம் மாநாட்டில் உறுதிப்படுத்துவோம் என Heiko Maas கூறியுள்ளார்.