ரஷ்யாவுடனான மோதலில் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கமாட்டோம்! ஜேர்மனி திட்டவட்டம்
ரஷ்யாவுடனான மோதலில் உக்ரைனுக்கு தற்போதைக்கு ஆயுதம் விநியோகிக்க மாட்டோம் என ஜேர்மனி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ரஷ்ய அதன் படைகளை உக்ரைன் எல்லைக்கு அருகே குவித்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளன.
இந்நிலையில் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது குறித்து ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் Christine Lambrecht கூறியதாவது, உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதற்கான விருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கனவே உக்ரைனுக்கான ஆதரவை நாங்கள் அளித்து வருகிறோம்.
உக்ரைன் பிப்ரவரியில் தேவையான பயிற்சியுடன் ஒரு முழுமையான கள மருத்துவமனையைப் பெறும்.
இவை அனைத்தும் 5.3 மில்லியன் யூரோக்களுக்கு ஜேர்மனியால் நிதியுதவி அளிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக ஜேர்மனி தனது இராணுவ மருத்துவமனைகளில் கடுமையாக காயமடைந்த உக்ரேனிய படைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
ஆனால் தற்போதைக்கு உக்ரைனு்ககு ஆயுதங்களை வழங்க ஜேர்மனி தயாராக இல்லை.
ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க எங்கள் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இந்த வகையில் ஆயுத விநியோகம் உதவியாக இருக்காது, மோதல் பகுதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதில்லை என ஜேர்மன் அரசாங்கத்தில் உடன்பாடு உள்ளது என Christine Lambrecht கூறினார்.