அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஜேர்மனியால் இலக்கை அடைய முடியாது! திட்டவட்டமாக அறிவித்த சுற்றுச்சூழல் அமைச்சர்
எதிர்வரவிருக்கும் இரண்டு ஆண்டுகளில் ஜேர்மனி தனது கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடைய முடியாது என்று பொருளாதாரம் மற்றும் காலநிலை பாதுகாப்பு அமைச்சர் Robert Habeck தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜேர்மனி அதன் காலநிலை பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, அப்போதைய அரசாங்கம் 2045 ஆம் ஆண்டிற்குள் ஜேர்மனியை கார்பன் இல்ல நாடாக மாற்றுவது உட்பட கார்பன் குறைப்பு இலக்குகளை நிர்ணயித்தது.
புதிய கூட்டணி அரசாங்கம், பயன்பாட்டுத் துறை மற்றும் உற்பத்தித் தொழில்கள், கட்டிடங்கள், போக்குவரத்து மற்றும் விவசாயம் முழுவதும் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் வகையில்,காலநிலைப் பாதுகாப்பு முயற்சிகளை முடுக்கிவிடுவதற்கான திட்டங்களை முன்வைத்தது.
இந்நிலைியல்,ஜேர்மனி அதன் 2022 மற்றும் 2023 ஆண்டிற்கான கார்பன் குறைப்பு இலக்கை அடைவது மிக கடினமாக இருக்கும்.பெரும் பின்னடைவிலிருந்து நாம் தொடங்க இருக்கிறோம் என பொருளாதாரம் மற்றும் காலநிலை பாதுகாப்பு அமைச்சர் Robert Habeck தெரிவித்துள்ளார்.
அதேசமயம், 2030 ஆம் ஆண்டுக்குள் 80% மின் தேவையை பூர்த்தி செய்ய வகையில் ஜேர்மனியில் ஆண்டிற்கு கட்டமைக்கப்படும் காற்றாலைகளின் எண்ணிக்கை 1,000-1,500 ஆக அதிகரிக்கும்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் காற்றாலைகளின் அனுமதியை விரைவுபடுத்துவதற்கான சட்டங்களை தயார் செய்ய அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என Robert Habeck தெரிவித்துள்ளார்.