ஜேர்மனியில் இரு பெண்களுக்கு இடையே மோதல்! நாய்களே மிரண்டு நின்ற சம்பவம்!
ஜேர்மனியில் இரண்டு நாய் உரிமையாளர்கள் சண்டையில் ஈடுபட்டு, ஒருவர் மற்றோருவரை கடித்ததைப் பார்த்து நாய்களே மிரண்டுபோய நின்ற வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.
கிழக்கு ஜேர்மனியின் துரிங்கியா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
51 வயதுடைய பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த மற்றோரு நாயின் உயிமையாளரான 27 வயதுடைய பெண் ஒருவர் நாயை அடித்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சண்டையின் போது, 51 வயதான பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர், அந்த 27 வயதுடைய பெண்ணின் காலில் கடித்து காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு பெண்களுக்கிடையே நடந்த சண்டையின் போது, அவர்களுடைய நாய்கள் மிரண்டுபோய் நின்று பார்த்துக் கொண்டிருந்தன, அவை கடிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உடல் உபாதைகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.