பட்டுப் புடவையில் ஜொலித்த தமிழ்ப்பெண்! ஜேர்மனி இளைஞருடன் கோலாகலமாக திருமணம்
ஜேர்மனியை சேர்ந்த இளைஞரை தமிழ்ப்பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தின் கன்னியாக்குமரியை சேர்ந்தவர் அனு விண்ணிமேரி (29). இவர் தனது மேற்படிப்புக்காக ஜேர்மனிக்கு சென்ற நிலையில் அங்குள்ள மேக்சி மிலன் பல்கலைக்கழகத்தில் படித்தார்.
பின்னர் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் அந்நாட்டை சேர்ந்த பேட்ரிக் சிக்பிரிட் (31) என்பவரும் பணியாற்றினார். அப்போது இருவரும் நட்பான நிலையில் பின்னர் காதலாக மாறியது.
dailythanthi
இதனைத்தொடர்ந்து அனு தனது காதல் பற்றி பெற்றோரிடம் தெரிவித்து அவர்களின் சம்மதத்தை வாங்கினார். பின்னர் பேட்ரிக் தனது பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் தமிழகம் வந்த நிலையில் இருவருக்கும் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று முன்தினம் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது மணமகன் மணமகளுக்கு தாலி செயின் அணிவித்தார். இந்த திருமணத்தில் மணப்பெண் பட்டு சேலையில் ஜொலித்தார். புதுமாப்பிள்ளை பேட்ரிக் கூறுகையில், எனக்கு அனு விண்ணிமேரி மீது காதல் மலர்ந்தது. எனது காதலையும், திருமணம் செய்ய விரும்புவதையும் அவரிடம் தெரிவித்தேன். அவரும் எனது காதலை ஏற்றுக்கொண்டதால் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம்.
திருமண பரோட்டா, பிரியாணியும் மிகவும் அருமையாக இருந்தது என மகிழ்ச்சி விலகாமல் கூறியுள்ளார்.