பிரித்தானியாவை மீண்டும் அபாய நாடுகள் பட்டியலில் சேர்த்தது ஜேர்மனி: காரணம் இதுதான்
ஜேர்மனி, பிரித்தானியாவை மீண்டும் தனது அபாய நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது. அதற்கு காரணம், இந்திய வகை கொரோனா வைரஸ் என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளதுதான்!
உண்மையாகவே ஜேர்மனியை விட பிரித்தானியாவில் கொரோனா தொற்று குறைவாகவே உள்ளது. ஆனால், ஜேர்மனியின் நோய்க் கட்டுப்பாட்டு மையமான Robert Koch நிறுவனம், இந்திய வகை கொரோனா வைரஸ் என அழைக்கப்படும் B.1.617.2 வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக்கிழமை முதல் பிரித்தானியாவும் ஜேர்மனியின் அபாய நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த வாரம் அறிமுகமாகியுள்ள புதிய விதிகளின்படி, இந்தியா மற்றும் பிரேசில் பொன்ற அதிக அபாயம் உள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தவிர்த்து மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில், அவர்கள் ஜேர்மனிக்குள் நுழைவதற்கு கொரோனா பரிசோதனையோ, ஜேர்மனிக்குள் நுழைந்தபின் தனிமைப்படுத்துதலோ தேவையில்லை என ஜேர்மனி அறிவித்துள்ளது.
மேலும், அபாய நாடுகளிலிருந்து வருபவர்கள், கொரோனா பரிசோதனை செய்து, தங்களுக்கு
கொரோனா இல்லை என்பதைக் காட்டும் சான்றிதழை சமர்ப்பித்தால் அவர்களுக்கு 10
நாட்கள் தனிமைப்படுத்துதல் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.