ஜேர்மனியில் கொரோனா தொற்றே இல்லை என்னும் நிலையை எட்டியுள்ள பகுதிகள்
ஜேர்மனியில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், இரண்டு மாவட்டங்களில் கொரோனா தொற்றே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று என்னும் எண்ணிக்கை, இன்றைய நிலவரப்படி (ஜூன் 8) 22.0 ஆக குறைந்துள்ளது. முந்தைய நாள் அது 24.3 ஆகவும், சென்ற வாரம் 35.2ஆகவும் இருந்தது.
மொத்தத்தில், ஒரு நாளில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,204ஆக உள்ளது. இது கடந்த வாரத்தை ஒப்பிடும்போது 33 சதவிகிதம் குறைவாகும். அதே நேரத்தில், கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்தபட்ச மூன்று இலக்கத்திலேயே உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140. ஒரு வாரத்துக்கு முன்பு இந்த எண்ணிக்கை 153ஆக இருந்தது. ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று என்னும் எண்ணிக்கை அனைத்து மாகாணங்களிலும் 30க்கு கீழ்தான் உள்ளது.
மகிழ்ச்சிக்குரிய விடயம் என்னவென்றால், Goslar மற்றும் Friesland ஆகிய இரண்டு
மாவட்டங்களிலும் கடந்த ஏழு நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று
கண்டறியப்படவே இல்லை என்பதுதான்.