12ஆம் வகுப்பு சிறுமி மீது திராவகம் வீச்சு! தலைநகரை அதிர்ச்சியாக்கிய சிறுவர்கள்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி மீது இரண்டு சிறுவர்கள் திராவகம் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி மீது திராவக வீச்சு
டெல்லியின் துவாரகா பகுதியில் காலை வேளையில் 12ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் தனது சகோதரியுடன் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவர்கள், திடீரென அந்த மாணவி மீது திராவகத்தை வீசியுள்ளனர்.
திராவகம் பட்டதால் அலறிய மாணவி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுவன் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், குறித்த இரண்டு சிறுவர்களில் ஒருவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். தப்பியோடிய மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.