நடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய இளம்பெண்! தீயாய் பரவும் வீடியோ
இந்தியாவில் நடுரோட்டில் இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த நவீன காலத்தில் அனைவரும் தொலைபேசி இல்லாமல் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராமில் லைக், ஷேர்காக இந்த காலத்து இளைஞர்கள் உயிரை பணையம் வைத்து வீடியோ வெளியிடுகின்றனர்.
அந்த வகையில் ஒரு இளம்பெண் வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாவட்டத்தில் உள்ள இந்தூர் சிக்னலில் இளம்பெண் ஒருவர் நடனமாகும் காட்சி வேகமாக பரவி வருகிறது.
அவர் பெயர் ஸ்ரேயா கல்ரா என்றும் அவர் மாடல் என்பது தெரிய வந்துள்ளது. போக்குவரத்து சிக்னலில் பச்சை விளக்கு எரியும் வரை அவர் நடனமாடுகிறார். அவரை வாகன ஓட்டுநர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
At Rasoma square in Indore a girl ran across the road to dance on the zebra crossing as soon as the traffic signal turned red, her video became viral on social media platform, later police served a notice to the girl for violating the traffic rules. pic.twitter.com/9ZIeWHhSwO
— Anurag Dwary (@Anurag_Dwary) September 15, 2021
போக்குவரத்து விதிகளை மதிக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்ரேயா கல்ரா தான் உருவாக்கிய வீடியோவை பற்றி தெளிவுபடுத்தினார்.
போக்குவரத்து விதிகளை மீறும் நோக்கத்தில் இதை எடுக்கவில்லை என்றும் முகமூடி அணிவது மற்றும் சிவப்பு விளக்கில் வாகனங்களை நிறுத்தி வைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமே இதை செய்ததாக தெரிவித்துள்ளார்.