வயல் வரப்பில் நடந்த போது திடீரென வலியால் துடித்த பள்ளி மாணவி! அங்கே பாம்பு செல்வதை கண்டு அதிர்ச்சியில் சிலையாக நின்ற பெற்றோர்
தமிழகத்தில் வயலுக்கு சென்று வீடு திரும்பிய பள்ளி மாணவியை அவர் பெற்றோர் கண்முன்னர் பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தின் கோட்டத்தூர் கிராமத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வித்தியா என்ற மகள் இருந்துள்ளார்.
இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பெற்றோருடன் வயலுக்கு சென்ற அவர் மாலையில் வீட்டிற்கு திரும்புவதற்காக வரப்பில் நடந்து வந்தார்.
அப்போது அவரது காலில் எதோ கடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டதில் வலியால் துடித்தார். பின்னர் பாம்பு மகளை கடித்துவிட்டு செல்வதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியில் சிலையாக நின்றனர்.
இதன் பின்னர் சுதாரித்து கொண்ட அவர்கள் மகளை தூக்கி கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.